திருக்குறள்

வியாழன், 4 ஜூலை, 2013

கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று தெரிய

கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று தெரிய வேண்டுமா?

கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று தெரிய வேண்டுமா?
கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம். 

கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும். 

கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். 

ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர். கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். 
ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

கர்ப்பிணிகளுக்கு அட்வைஸ்

· கர்ப்பிணிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை பிறக்கும். சுகப் பிரசவம் ஆகும். 

· கர்ப்பிணிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும். 

· கர்ப்பிணிகள் மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது. 

· அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. 

· மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது. 

· மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும். 

· கர்ப்பிணிகள் சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கா வலிப்பு ஏற்படும். 

· சதா வருத்தத்துடன் உள்ளவர்களுக்கு பயப்படும் சுபாவம் உள்ள குழந்தை பிறக்கும். 

· கர்ப்ப காலத்தில் பிறருக்கு கெடுதியை நினைத்தால் பிறக்கும் குழந்தை பிறரை இம்சிப்பவனாகவும், பொறாமை குணம் உள்ளதாகவும் இருக்கும். 

· கர்ப்ப காலத்தில் சதா தூங்கிக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை சோம்பல் புத்திகுறைவு, அக்கினி பலம் குறைவு போன்ற குறைபாடுகளுடன் பிறக்கும். 

· மதுபானம் கர்ப்பகாலத்தில் குடித்தால், பிறக்கும் குழந்தை சஞ்சல புத்தி உடையவனாக பிறக்கும். 

· இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சர்க்கரை வியாதி, ஊமைத்தன்மை, அதிக பருமன் ஆகியவை உண்டாகும். 
· அதிக புளிப்பு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இரத்த பித்தம், தோல், கண் வியாதிகள் ஏற்படும். கசப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை உடம்பு உலர்ந்தும் பலம் குன்றியதுமாகவும் இருக்கும். துவர்ப்பு அதிகம் சாப்பிட்டால் கருத்த மேனியும், பொருமல் வியாதியும் உள்ள குழந்தை பிறக்கும்.

கருத்துகள் இல்லை: