திருக்குறள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மலச்சிக்கல் தீர மேலும் சில எளிய வழிகள்


1. இரவு படுக்கைக்குச் செல்லும் போது பழுத்த
வாழைப்பழம் ஒன்றும் சூடான பால் ஒரு குவளையும்
அருந்துவது.

2. மாவடு இரண்டு அல்லது மூன்றினை தேனுடனும்
உப்புடனும் கலந்து தின்பது.

3. பச்சை மாங்காயை நறுக்கி உப்பிட்டுத் தின்பது.

4. 2 தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன் 25 மி.லி.
தயிரும் 50 மி.லி. மாம்பழச்சாறும் சேர்த்துப் பருகுவது.

5. சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறும் சிறிதளவு
உப்பும் தேனும் கலந்து பருகுவது.

6. ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் பூண்டைச்
சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி உண்பது.

7. ஒரு குவளை தக்காளிச் சாற்றில் சிறிதளவு உப்பும்
அரைத் தேக்கரண்டி மிளகுத்தூளும் கலந்து பருகுவது.

8. ஒரு கண்ணாடிக் குவளை தண்ணீர் ஒரு இரண்டு
மேஜைக் கரண்டி அளவு கிஸ்மிஸ் பழத்தை இரவு
முழுவதும் ஊறவைத்துக் காலையில் உண்பது.

9. காலையில் எழுந்ததும் ஒரு பெரிய குவளை பால்
சேர்க்காத சூடான கடுங்காப்பி அருந்துவது


10. காலை எழுந்ததும் இரண்டு பெரிய குவளை
தண்ணீர் அருந்துவது.

-

VARICOSE VEIN

RADIAL TUNNEL SYNDROME

SPINE NERVE

HEAD POINTS

KIDNEY MERIDIAN

Five shu points of kidney meridian

U*B POINTS

TONGUE ACUPUNCTURE

THE POINTS INFERIOR ASPECT OF TONGUE

ACU POINTS

டீ என்கிற தேநீர் – சில உண்மைகள்

டீ என்கிற தேநீர் – சில உண்மைகள்


கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.