திருக்குறள்

புதன், 28 ஆகஸ்ட், 2013

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!
குட்டையான செடியில் பூக்கும் மலர்களைக் கொண்ட சீமைச்சாமந்தி(Chamomile) மருந்திற்கு பெரிதும் பயன்படுகிறது.. புதிய மற்றும் உலர்ந்த சீமைச்சாமந்தியின் பூக்கள் தேநீர் தயாரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு சுகாதார நலன்களை கொண்டுள்ளது.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சீமைச்சாமந்தியின் பூக்களில் தயாரிக்கப்படும் தேநீர் தசை தளர்வை நீக்கவும், மனதை ஆறுதல் படுத்தவும் உதவுகிறது. சீமைச்சாமந்தியின் தேநீர் தூக்கம் வராமல் அவதிபடுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இப்பூக்களின் தேநீரை தினசரி எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.

இதில் ஆக்ஸிஜனேற்ற பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளது. சீமைச்சாமந்தியின் தேநீர் அழற்சி விளைவித்தலுக்கு எதிரான முகவர் மற்றும் இயற்கையாக பாக்டீரியாவை எதிர்க்கும் சக்திகளை கொண்டுள்ளது. தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

குளிர்ந்த அல்லது சூடான நிலையிலும் தேநீர் செய்து நீங்கள் பருகலாம். நீங்கள் சுவையுடன் இருக்க வேண்டும் என விரும்பினால் தேநீருடன் தேன் அல்லது எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் பருகுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சீமைச்சாமந்தியின் தேநீரை கர்ப்பிணிபெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் காஃபின் கலந்திருப்பதால் கர்ப்பிணியின் கர்ப்பபையை சுருக்கும் வேலையை தேநீர் தூண்டுகிறது. ஆதலால் இது கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. மேலும் ஆஸ்துமா, அலர்ஜி, மற்றும் உணர்வு திறனை ஏற்படுத்தும் தோலை கொண்டவர்கள் தேநீர் மற்றும் மலர்களைக்கூட சுவாசிக்ககூடாது.

கருத்துகள் இல்லை: