திருக்குறள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்


உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.

கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை..கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.

நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.

அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி . நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.

நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்.

உணவும் மருந்தும்...

உணவும் மருந்தும்...

எண்ணிலடங்கா அதிசியத்தையும், ஆச்சர்யத்தையும் நமது சித்தர்கள் நமக்கு காட்டிசென்றுள்ளனர். உணவே மருந்தாகச் செய்து நமது வாழ்வை ஆரோக்கியமாக வாழ வழி செய்தனர். சித்தர்களின் வழியை தற்போதைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருப்பது.

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

ஒரு சிறிய விஷயத்தில் இத்தனை நல்லனவற்றை வைத்த சித்தர்கள் வாழ்க. அனால் இதை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பதே விடைதெரியாத கேள்வி.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்..!

இளநரை போக்க மூலிகை எண்ணெய்..!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கொத்தமல்லலி - சிறிதளவு
நெல்லி வற்றல் - 10 கிராம்
வெட்டிவேர் - 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.

திங்கள், 23 செப்டம்பர், 2013

முடி அடர்த்தியாக வளர.... இய‌ற்கை வைத்தியம்,

 http://pad2.whstatic.com/images/thumb/f/f4/Pass-a-Hair-Follicle-Drug-Test-Step-3.jpg/550px-Pass-a-Hair-Follicle-Drug-Test-Step-3.jpg
முடி அடர்த்தியாக வளர.... இய‌ற்கை வைத்தியம்,

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........

1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மார்பக புற்றுநோய் என் பார்வையில்

மார்பக புற்றுநோய் என் பார்வையில்:
குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம். 
பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 
 மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அடுத்தகட்டமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள மெமோகிராபி எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது.
 இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி செய்ய முடியும். மேலும் நுண்ணிய ஊசியின் வழியாக கட்டியின் திசுக்களை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து அதனை உறுதி செய்து கொள்ளலாம். கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள், மாதவிலக்கு காலத்தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குறைந்த வயதில் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவர்கள், எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள், அதிக உதிரப்போக்கு, அதிக வெள்ளைப் போக்கு போன்ற பிரச்னையை முறையாக கவனிக்காமல் விட்டவர்கள், தைராய்டு பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காதவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் வரலாம்.

 பாதுகாப்பு முறை: 

 பெண்கள் எப்போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மைக் காலத்தில் பெண்கள் தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. நாள்பட்ட கேன்சருக்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்பத்தில் கேன்சர் கட்டிகள் கண்டறியப்பட்டால் ஹோமியோபதியில் கட்டியை கரைப்பதற்கான மருந்துகள் உள்ளன. மேலும் கேன்சர் பாதிப்பை அடுத்த உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். கெமிக்கல் கலப்புள்ள உணவு வகைகளை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

 தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. முளை கட்டிய பயறு, நெல்லிக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சிறந்தது. சுகாதாரமான குடிநீரும் அவசியம். மேலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும். 
 உணவு:
 சேமியா டால் பாத்: சேமியா ஒரு கப் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு 50 கிராம் எடுத்து அதில் சீரகத்தூள், பூண்டு இரண்டு பல், வெந்தயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் தாளித்து பின்னர் வெங்காயம்4, தக்காளி1, பச்சை மிளகாய்2 சேர்த்து வதக்கவும். இத்துடன் துவரம்பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் சேமியா சேர்த்து வெந்தபின் இறக்கவும். இதில் கார்போஹைட்ரேட், மினரல்கள் கிடைக்கும். ரவா அடை: 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதில் அரைக்கிலோ வெள்ளை ரவை சேர்த்துக் கலக்கவும். 20 சின்ன வெங்காயம் மற்றும் 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்க்கவும். கெட்டியான ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு போட்டு அடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை உடனடியாக தோசைக்கல்லில் அடையாக சுட்டு எடுக்கலாம். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. கத்தரி வடை: 100 கிராம் கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். கடலைப் பருப்பு மற்றும் முளை கட்டிய 50 கிராம் பச்சைப் பயறு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பொடியாக நறுக்கிய 150 கிராம் கத்தரிக்காய் மற்றும் 6 பச்சைமிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் 50 கிராம் கெட்டித் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 
 உணவு முறை:
 மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?  பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது. எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் இதற்கு ஒரு காரணமாகிறது. தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அசைவ வகையில் கொழுப்பு இல்லாத எலும்பு உள்ள சிக்கன் மற்றும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 

  பாட்டி வைத்தியம்
பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளு க்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். மகிழம் பூவை பறித்து வைத்து கட்டிக் கொண்டால் மார்புகள் எடுப்பான தோற்றம் அளிக்கும். மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத் திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும். இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம். அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சை யாக சாப்பிடுவது நல்லது. கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்த

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்த மனிதர்கள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது, அவர்களது இதயத்திற்குப் போகும் இரத்தக் குழாய்கள் மிகவும் விரிவடைந்து, ரத்தக் குழாயில் தாராளமாய் ரத்தம் ஓடிடவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், அந்தச் சிரிப்பு (நமக்கு) மனிதர்களுக்குப் பெரிதும் உதவிடு கிறது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் பிஸா (Pisa) பகுதியில் உள்ள Institute of Chemical Philsiology என்ற அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி மூலம் - மாரடைப்பு வராமல் தடுக்க ஒரு புதிய மருந்தாகி இந்த வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் உள்ள European Society of cardialogists என்ற அமைப்பு மாநாட்டில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தனர். இதயநோயாளிகளில் 78.5 விழுக் காடு உள்ளவர்கள் இதய நோயி லிருந்து விடுபட்டிருப்பதற்குக் காரணம், கோபப்படாமல் அவர்கள் வாழுவது தான்! இன்னொரு கல்வியகத்தில் கோபம் வந்தவர்களை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களில் 57.4 சதவிகிதம்தான் வாழுகிறார்கள். இதயநோய் தாக்கும் நிலை அவர்கள் பலருக்கு உண்டு! அமெரிக்க பால்டிமோர் மருத்துவமனை ஆய்விலும் இத்தாலிய ஆய்வினையே செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இரத்தக் குழாய் மட்டுமா விரிவடைகிறது - நம் மனங்களும்கூடத்தான்! மருந்துகள் தரும் சிகிச்சைகளை விட, மன மகிழ்ச்சி, இறுக்கத்தினை எட்டி நில் என்று சொல்வதுபோல் எப்போதும் கல கலப்பான சிரிப்பு மன்னர்களாக வாழுப வர்கள் ஆயுள் குறிப்பாக இதயநோய் வந்தபிறகும்கூட அவர்கள் ஆயுள் நீளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார் டில்லி எஸ்கார்ட்ஸ் (நுளஉடிசவள) மருத்துவ மனையின் பிரபல இதய சிகிச்சை டாக்டர் அசோக் சேத் அவர்கள்! அவர் முக்கிய அறிவுரை கூறுகிறார் - இதயநோயாளிகள் மட்டுமல்ல; பொது வான மனிதர்கள் எவரும் கோபம் கொள்ளுவதால் மாரடைப்பு விரைவுடன் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கையாகக் கூறுகிறார். நமது சுரப்பிகள் (Adrenaline and Rasconstrictor) ஹார்மோன்கள், ரத்தக் குழாய்களைச் சுருக்கி, இரத்த ஓட்டத் திற்குத்தான் தடை ஏற்படுத்தி மாரடைப்பு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனவாம்! 228 நோயாளிகளில் 200 பேர்கள் ஆண்கள். இதில் 51 பேர்கள் இதய நோய் - மாரடைப்புக்கு ஆளானவர்கள் 28 மரணங்கள் 23 மாரடைப்பு நோயாளிகள் மாறிய நிலை! வள்ளுவர் சொன்ன சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி எவ்வளவு அறிவி யல் பூர்வக் கருத்து என்பதை எண் ணுங்கள். மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் - குறள் (303) இதன் பொருள்: ஒருவன், யாரொரு வரிடத்திலும் சினங்கொள்ளாமல் அந்தச் சினத்தை அறவே மறந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தச் சினத்தால் தீமையான விளைவுகள் தாம் அவனுக்கு ஏற்படும். நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற - குறள் (304) ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும் அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக் கின்றன. சினத்தைவிட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள் வேறு ஏதொன்றும் இருக்க முடியாது. வள்ளுவர் சிந்தனை எப்படிப்பட்ட அறவியல் சிந்தனையாக உள்ளது என்பது எல்லையற்ற மகிழ்ச்சிக்குரியது அல்லவா?
தைராய்டு கோளாறுகள் உணவு டிப்ஸ் தைராய்டு நோய் உணவு குறிப்புகள் - உணவு, காய்கறிகள், மீன், முழு தானியங்கள், கோழி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், பழங்கள் நிறைந்த இருக்க வேண்டும் தைராய்டு நோய் உணவு குறிப்புகள் - உணவு, பழங்கள் நிறைந்த இருக்க வேண்டும் காய்கறிகள், மீன், முழு தானியங்கள், கோழி, பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ். வழக்கமாக மருந்து சரியான அளவு எடுத்து, தைராய்டு பரிசீலனைக்கு செல்ல. தைராய்டு செயல்பாடு தொடர்ந்து மாற்ற முடியும் எனவே குறைந்தது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஆய்வு வேண்டும். நீங்கள் தைராய்டு பாதிக்கப்படுகின்றனர் இருந்தால் உடல் செயல்பாடு குறிப்பாக முக்கிய ஏனெனில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கவும். இது வளர்சிதை முடுக்கி மற்றும் எடை இழப்பு அதிகரிக்க தேவையான உள்ளது. இது தினசரி உடற்பயிற்சி 30-45 நிமிடங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் இருந்தால் வழக்கமான உடல் செயல்பாடு மட்டுமே 10 நிமிடங்கள் ஒரு நாள் செயல்பாட்டை அதிகரிக்க உதவியும். அவர்கள் தனிப்பட்ட இருந்து தனிப்பட்ட மாறுபட்டு, மேலும் காலப்போக்கில் மாற்ற முடியும் என்பதால், உங்கள் உடல் தேவைகளை கற்கவும். தைராய்டு செயல்பாடு நன்மை என்று உணவுகள்: கேரட், கீரை, apricots, அஸ்பாரகஸ், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், சூரியகாந்தி விதைகள், முழு தானியங்கள், வாழைப்பழங்கள், மீன் எண்ணெய். உங்கள் சாப்பாட்டுக்கு இந்த உணவுகள் சேர்க்கவும். சேர்மங்கள் goitrogenim நிறைந்த உணவுகள் உங்கள் உட்கொள்ளும் குறைக்கவும் முட்டைக்கோசு, கோசு, ப்ரோக்கோலி, கடுகு (கடுகு), லிமா பீன்ஸ், ஆளி விதை, இனிப்பு உருளைக்கிழங்குகள், வேர்கடலை, சோயா தயாரிப்புகள்: யாருடைய உட்கொள்ளும் உணவுகள் ஏனெனில் அயோடின் உறிஞ்சுதல் ஒன்றும் சாத்திய, குறைக்கப்பட வேண்டும். 2-3 முறை ஒரு வாரம் இந்த உணவுகள் உங்கள் உட்கொள்ளும் குறைக்கவும், ஆனால் தேவை முற்றிலும் வெளியேற்றப்படுவதை முடியாது. (காபி, கோகோ கோலா, சில டீஸ்) காஃபின் உயர் பானங்களை தவிர்க்கவும்; அவர்கள் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும் ஏனெனில் புகை மற்றும் மது போன்ற தூண்டிகள் தவிர்க்கவும்.